Header Ads

டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி

 


தாக்குதலுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த பின்னர், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தம்மை தாக்கினார் என  இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்று  நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்தினால் நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.



No comments

Powered by Blogger.