Header Ads

மரம் முறிந்து பஸ்ஸில் விழுந்தது: 17 பேர் காயம்


கொள்ளுப்பிட்டி, லிபட்டி சந்திக்கு அருகில் பாரிய மரம் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது விழுந்ததால் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனால் டுப்பிளிகேஷன் வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த பஸ் வெள்ளவத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பஸ்ஸுக்குள் மேலும் இருவர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொள்ளுப்பிட்டி சாந்தி மற்றும் அதனை அண்மித்த  பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.  



No comments

Powered by Blogger.