Header Ads

இந்தியா - கனடா விவகாரம் - இந்தியாவிற்கு இலங்கை ஆதரவு


இந்திய - கனடா விவகாரத்தில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிக்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என  கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானதும் நேரடியானதுமாக உள்ளது  என மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், இந்த விடயங்களில் தமது நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தில் இந்தியாவிற்கு ஆதரவளிகின்றோம் என்றும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.




No comments

Powered by Blogger.