Header Ads

'பெற்றிக்கொல கெம்பஸ்' நிறுவனம் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு - புனானையில் பெற்றிக்கொல கெம்பஸ் (Batticaloa Campus) என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர் கல்வி நிறுவனம் மீளவும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கல்வி நிறுவனம் நேற்று தன்னிடம் கையளிக்கப்பட்டது என எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார். 

 கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் கண்காணிப்பின் கீழ் 'பெற்றிக்கொல கெம்பஸ்' உயர் கல்வி நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

இந்த நி​லையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடர்பில் சர்ச்சை உருவாகியிருந்தது. பின்னர் குறித்த கட்டடத்தை அரசு பொறுப்பேற்றது.

இதன் பின்னர், கொரோனா காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்தப்பட்டது. 

இதனையடுத்து, 'பெற்றிக்கொல கெம்பஸ்'  உயர் கல்வி நிறுவனம் படையினரால் நேற்றுகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.  ஹிஸ்புல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கல்வி நிறுவனம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.



No comments

Powered by Blogger.