பேருந்து விபத்து: 24 பேர் உயிரிழப்பு!
பெரு நாட்டில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரு நாட்டின் அயகுச்சோவா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பயணித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், பலர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments