Header Ads

விஜய் ஆண்டனியின் மகளின் உருக்கமான கடிதம்!


பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகளான மீரா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீராவின் உடல் சென்னை - ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  பின்னர் பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் உடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

இந்தநிலையில், மீராவின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது ஒரு கடிதம் கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில் 'ஐ லவ்யூ ஓல். மிஸ் யூ ஓல்' என்று எழுதப்பட்டுள்ளது என செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேலும், பத்து வரிகள் கொண்ட அந்த கடிதம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது என்றும் இந்த கடிதம் மீரா மன அழுத்தத்தில் இருந்தபோது எழுதியதா? அல்லது தற்கொலை செய்யும் முன்பு எழுதியதா? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  



No comments

Powered by Blogger.