Header Ads

விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ் இளைஞன்!


சென்னை விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி நுழைந்த யாழ்ப்பாண இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி நுழைந்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞன் திங்கட்கிழமை (14) இரவு விமானடிக்கெட், சிறப்பு அனுமதி அட்டை எதுவும் இல்லாமல், விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும் இடத்தில் சுற்றித்திரிந்துள்ளார்.

இதன் பின்னர் இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் கையடக்க தொலைபேசியை திருட முயன்றதையடுத்து, அந்த இளைஞனை பிடித்து அதிகாரிகள், விமான நிலையமேலாளர் அறையில் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது விசாரணையில், அவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், 3 மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. 



No comments

Powered by Blogger.