Header Ads

பாட்டியின் கழுத்தை நெரித்து கொன்ற பேரன் - பரிஸ் புறநகரில் அதிர்ச்சி சம்பவம்



 28 வயதுடைய ஒருவர் அவரது பாட்டியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பரிசின் புறநகரான Évry இல் இடம்பெற்ற இச்சம்பவம் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

Évry (Essonne) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து ஜூலை 31 ஆம் திகதி இரவு , 86 வயதுடைய மூதாட்டி ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டது. குறித்த வீட்டில் பேரனும், பாட்டியும் வசித்த நிலையில், கடந்த ஜூலை 25 ஆம் திகதியில் இருந்து இருவரது தொடர்பும் பெறமுடியவில்லை என காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.



அங்கு குறித்த மூதாட்டி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், உடற்கூறு பரிசோதனைகளில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்தது.

மேலதிக விசாரணைகளில் மூதாட்டியை கொன்றது அவரது 28 வயதுடைய பேரன் எனவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்தது.

காவல்துறையினரின் விசாரணைகளில் பாட்டி பணம் தர மறுத்ததாகவும், அதையடுத்தே தான் அவரைக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.