Header Ads

இனவெறி தாக்குதல்: மூவர் பலி!



அமெரிக்காவில் இடம்பெற்ற இனவெறி துப்பாக்கிச்சூட்டில் கறுப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வெலி பகுதியில் நேற்று துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.. 

குறித்த பகுதியில் வெள்ளை இனத்தவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கறுப்பினத்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவரும், இரண்டு ஆண்களும் என கறுப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது பொலிஸார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.  




No comments

Powered by Blogger.