Header Ads

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டனர்!


 புதிய விண்வெளி வீரர்கள் குழுவொன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து நாசா விண்வெளி நிலையம் முன்னெடுத்திருந்தது.

அதன்படி, நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்களுடன் பால்கன்-9 விண்கலம் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என  நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், பூமியில் இருந்து பால்கன் 9 ரொக்கெட் மூலம் 4 வீரர்களுடன் அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளன.

பூமியில் இருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் இயங்கி வரும் இந்த விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிற உறுப்பு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைந்து, விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வருகிறது.

இறுதியாக கடந்த மார்ச் மாதம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களின் 6 மாத பணிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக புதிய விண்வெளி வீரர்கள் குழு நேற்று சர்வதேச விண்வெளி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 




No comments

Powered by Blogger.