Header Ads

நெற்பயிர்களுக்கு தீ வைத்தால் நட்டஈடு இல்லை: விவசாய அமைச்சு


வறட்சி காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு தீ வைத்தால், நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

நெற்பயிர்களுக்கு தீ வைப்பது சட்டவிரோதமானது எனவும், அண்மைய நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைத்ததாகவும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வறட்சியால் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.