Header Ads

சட்டவிரோத காணி அபகரிப்பு - வேலிகளை தகர்த்தெறிந்த மாகாவலி அதிகார சபை!


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிய கம்பி வேலிகள் மாகாவலி அதிகார சபையினர் இடித்துள்ளனர்.

மாகாவலி அதிகார சபையினர், பலத்த இராணுவ பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று  புல்டோசர் மூலம் கம்பி வேலிகள் இடித்து தள்ளியதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வாழைச்சேனை கொழும்பு வீதியிலுள்ள நாவலடி தொடக்கம் ஜெயந்தியாலை பிரதேசம் வரையிலான தொடருந்து தண்டவாளத்துக்கும் வீதிக்கும் இடையிலான 28 ஏக்கர் அரச காணிகளே அபகரிக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, நாவலடி ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த காணி அபகரிப்பாளர் சிலர் குறித்த பகுதியில் காட்டு மரங்களை வெட்டி சட்டவிரோதமாக  முள் கம்பி வேலிகள் நாட்டி கட்டடங்கள் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த புதன் கிழமை வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் சென்று காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்களிடம் இது அரச காணி இந்த காணிகளுக்கு அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றிக் கொண்டு உடனடியாக வெளியேற வேண்டும் என கூறியுள்ளனர்.

அவ்வாறு இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவைகளை அகற்றிச் செல்வதற்கு 2 நாள் அவகாசம் தருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பொலிஸார் மற்றும் இராணவ பாதுகாப்புடன் மகாவலி அதிகாரசபையினர் முள் கம்பி வேலிகளை  அகற்றியுள்ளனர். 



No comments

Powered by Blogger.