Header Ads

வவுனியா இரட்டை கொலை விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் பிரசன்னப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக பிரதான சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 5 சந்தேகநபர்கள கைது செய்யப்பட்டிருந்தனர்.

வவுனியா - தோணிக்கல் பகுதியில் பிறந்த நாள் நிகழ்வொன்று இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் அங்கு வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் வீட்டுக்கும் தீ வைத்தனர்.

இதன்போது, 21 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது கணவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 



No comments

Powered by Blogger.