Header Ads

ஸ்பெயின் எல்லையில் காட்டுத் தீ


மத்திய தரைக்கடல் கடற்கரையில் ஸ்பெயின் எல்லையில் உள்ள போர்ட்போவில் காட்டுத்தீ பரவியுள்ளது.

இந்த தீப்பரவல் நேற்று ஏற்பட்டுள்ளதுடன் இதனை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடியுள்ளனர்.

குறித்த பகுதியில் தீப்பரவல் அதிகரித்தமையால் 130க்கும் மேற்பட்டவர்களை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றியதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ சுமார் 435 ஹெக்டேர் நிலத்தை நாசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினை பிரான்சுடன் இணைக்கும் தொடருந்து நிலையமான போர்ட்போவின் தெற்கில் தீ பரவல் தொடர்பில் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர் முன்னெச்சரிக்கையாக மக்கள் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை மீட்பு பணியில், கட்டலான் செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். 


No comments

Powered by Blogger.