வறட்சி காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சிறுவர் நோய்கள் தொடர்பான நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறுவர்கள் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிகளவில் வியர்வை வெளியேறுவதால் நீர்ச்சத்து குறைவடையும் வாய்ப்பு காணப்படுகிறது என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர், இளநீர், தேசிக்காய் சாறு, தோடம்பழம், மாதுளம்பழம், ஜீவனி போன்ற நீராகாரங்களை சிறுவர்களுக்கு அதிகமாக வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சிறுவர்கள் நீரில் அதிகமாக விளையாடுவதால் தோல் நோய்களை தவிர்த்துக்கொள்ளலாம் என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments