Header Ads

சுரங்கம் இடிந்து 3 பேர் பலி!


ஆப்கானிஸ்தானின் வடக்கு தகார் மாகாணத்திற்குட்பட்ட ரஸ்தாக் பகுதியில் சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுத்து வந்தனர்.

இந்தநிலையில் சுரங்க தொழிலாளர்கள் இந்த தங்க சுரங்கத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சுரங்கத்திற்குள் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.

சுரங்கத்திற்குள் புதையுண்ட 3 பேர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 



No comments

Powered by Blogger.