Header Ads

30 பவுன் தங்க நகைகளுடன் நால்வர் கைது


யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் யாழ்.குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் இணுவில் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று(29) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.