Header Ads

காலி முகத்திடலில் காலாவதியான உணவுகள்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை


காலி முகத்திடலிலுள்ள உணவு விற்பனையாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற வகையில் காணப்படுவதாக பொதுமக்களால் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம பொது சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கொழும்பு மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு மாத்திரமே காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் வர்த்தகம் செய்வதற்கு வாய்ப்பு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான சோதனை நடவடிக்கையில் 4 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.