Header Ads

இலங்கை முழுவதுமே முருகனின் அருள்: யாழ்ப்பாணத்தில் நடிகை கஸ்தூரி தெரிவிப்பு


வடக்கில் இருந்து தெற்கு வரை முருகனின் கடாட்சம் அமைந்துள்ளதாகவும், தமிழ் கடவுள் முருகன் இருக்கும் வரை தமிழ் உறவுகள் இருக்கும் வரை யாரும் நம்மளை அசைக்க முடியாது என தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரி யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் (29) வருகை தந்துள்ளார்.

தாவாடி அம்பலவான முருகன் ஆலயத்தின் திருமஞ்ச திருவிழாவுக்கு வருகை தந்து சிறு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி. முருகனின் கடாட்சம் நீக்கமற நிறைந்துள்ள பூமி. இலங்கை முழுவதுமே முருகனின் கடாட்சம் தான் அமைந்துள்ளது.

இப்போதுதான் ஆங்காங்கே விகாரைகள் கட்டுகிறார்கள். ஆனால் எல்லா இடத்திலேயும் உண்மையாக இருப்பது சைவ சமயமும் இங்கேதான் இருக்கிறது தெற்கில் கதிர்காமம் முதல் வடக்கே நல்லூர் வரை எல்லாமே முருகன் அருள் பெற்ற பூமியாகவே இருக்கிறது.

இதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் இருக்கும் வரை, தமிழ் கடவுள் முருகன் இருக்கும் வரை எமது தமிழ் உணர்வை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது.

இந்த கோயிலுக்கு உள்ளே வரும் பொழுது அருமையான மந்திரங்கள் எல்லாம் ஓங்கி ஒலித்தன. அதேபோன்று தமிழ் நாதஸ்வர கலைஞர்களின் அற்புத இசையில் எம்பெருமான் வளம் பெறும் காட்சி அற்புதமானது.

தமிழ்நாட்டில் எல்லாம் இவ்வாறு கிடையாது. எல்லாவற்றையும் அரசு எடுத்துக் கொண்டது அதற்குப் பிறகு உண்டியலில் பணம் நிரப்புவதை மட்டுமே அவர்கள் குறியாக கொண்டிருந்தார்கள் இப்படியான அருமையான காட்சிகள் எல்லாம் அங்கே குறைந்துவிட்டது. என்ன தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.