Header Ads

காவல்துறையினரை அழைத்த 11 வயது மகள்! - தந்தை கைது..!



11 வயதுடைய சிறுமி ஒருவர் காவல்துறையினரை அழைத்ததை அடுத்து, அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை ஒக்டோபர் 9 ஆம் திகதி இரவு இச்சம்பவம் Baume-les-Dames நகரில் இடம்பெற்றுள்ளது. தனது மகளை மகிழுந்தில் ஏற்றிக்கொண்டு Besançon மறும் Montbéliard நகர்களுக்கிடையே தந்தை ஒருவர் பயணித்துள்ளார். தந்தை மிகவும் மது அருந்தி நிதானம் இழந்து மகிழுந்தை செலுத்தியதால், அவரது மகள் காவல்துறையினரை அழைத்துள்ளார்.

தனது தொலைபேசியில் குறுந்தகவல் ஊடாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இரவு 9.30 மணி அளவில் குறித்த மகிழுந்தை சுற்றிவளைத்து தடுத்து நிறுத்திய காவல்துறையினர், தந்தையை சோதனையிட்டனர். அவரது இரத்தத்தில் 1.96 கிராம் மது கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தந்தையின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டது.

மகிழுந்தில் இருந்த 11 வயது மகளும், அவரது தங்கையும் மீட்கப்பட்டு அவர்களது தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.  

*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*



No comments

Powered by Blogger.