உலகம்தமிழர் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா!: சீனாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கீழடியின் பெருமை..வைரலாகும் புகைப்படம்..!!

பண்டைய காலத்தில் வைகை ஆறு, கீழடி, அகரம் வழியாக சென்றிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட பிராமிய எழுத்துக்கள், உறைகிணறு, ஆபரணங்கள் உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் ஆதாரங்கள் அனைத்து தரப்பினரும் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் நாகரீகத்தை விளக்கும் கீழடியின் பெருமை தற்போது சீனா வரை சென்றுள்ளது. அங்குள்ள யுனன் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மாணவர்களுக்கு கீழடி ஆழ்வில் தமிழர்களின் வரலாற்று பெருமைகள் குறித்து தமிழ் ஆசிரியை நிறைமதி கிகி ஜாங் பாடம் எடுத்ததை தனது முகநூலில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை நேரில் பார்வையிட்டு சென்றார். இந்த நிலையில் தன்னுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு கீழடி பெருமை குறித்து பாடம் எடுத்ததாக மிக பெருமையுடன் தனது முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். சிவகங்கை டு சீனா என்ற கமெண்டுகளுடன் கீழடி குறித்து சீனாவில் ஆசிரியர் பதிவிடும் படங்களை தொடற்சியாக பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.
No comments