கொடிகாமம் சந்தையில் 17 பேருக்கு COVID-19 தொற்று உறுதி
கொடிகாமம் சந்தையில் 17 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 84 பேரிடம் பெறப்பட்ட PCR மாதிரிகளின் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே 17 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தென்மராட்சியின் பல பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால் மக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்துகின்றனர்.
No comments