Header Ads

மட்டக்களப்பு இளைஞன் மரணம் தொடர்பில் சகோதரி பகீர் தகவல் !

 

மட்டக்களப்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த 21 வயது சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் தங்கை , தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை கண் முன்னே பார்த்தேன் என தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு' என்றும் இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் மருத்துவ உடல் கூற்று அறிக்கையில் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் உயிரிழந்த இளஞனின் சகோதரி வலியுறுத்தியுள்ளார். கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ் போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் என கேள்வி எழுப்பியுள்ள குறித்த யுவதி, இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றதாகவும்  குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.