Header Ads

சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றப்படாது - நாடாளுமன்றில் அறிவித்தார் அலி சப்ரி


 ஸ்ரீலங்காவில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்றவகையில் மாற்றுவதற்கு அரசாங்கம் செயற்படப்போவது இல்லை என நீதியமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதற்கான யோசனை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த விடயத்திற்கு பதிலளிக்கும் வகையில், துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டார்.

சட்டத்தின் படியே எவருக்கும் எதிராக குற்றவியல் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் பலரும் நீண்டகாலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பில் உள்ள நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பலர் தண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர். சிலர் தடுப்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பௌத்த தர்மம் மற்றும் பல தர்மப் போதனைகள் உள்ள நாட்டில் வாழும் நாங்கள் எவரையும் பழிவாங்கும் படலத்தை மேற்கொள்ளமாட்டோம்.

இந்த விவகாரத்தை அரசியலுக்குள் இழுக்கக்கூடாது. இந்த வழக்குகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இதுபற்றி சட்டமா அதிபர் மற்றும் அரச தலைவர், பிரதமர், நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களுடன் பேச்சு நடத்தியிருக்கின்றேன். அதற்கமைய வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.

வழக்கு இல்லாவிட்டால் எவரையும் நீண்டகாலமாக தடுப்பில் வைத்திருக்க முடியாது. அதற்கமைய எதிர்வரும் நாட்களில் பேச்சு வழக்கிலல்ல - செயற்பாட்டில் நாங்கள் காண்பிப்போம்.

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மாத்திரமல்ல, அதுபற்றி நாங்கள் நேற்று அமைச்சரவையில் பயங்கரவாத தடைச்சட்டம் பல வருடங்களாக திருத்தப்படாத காரணத்தினால் அதனை மீளாய்வு செய்வதற்கும் இணங்கியிருக்கின்றோம்.

ஆனால் சர்வதேசத்திற்கு அவசியமான வகையில் அல்லாமல் எமது நாட்டிற்கு அவசியமான வகையில் அதனைத் திருத்தியமைப்போம் என்றார்.


🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

No comments

Powered by Blogger.