Header Ads

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு


 கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வாட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இந்த நிலையில் சில நிறுவனங்கள் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்திகளை அனுப்பி இதுபோன்ற பதிவு நடைமுறைகளைத் தொடங்கியுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

எனினும் அவை குறித்து அந்த நிறுவனங்கள் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை ஆரோக்கியமானவை அல்ல என குறிப்பிட்ட வைத்தியர் ஹேமந்த ஹேரத், தடுப்பூசி செலுத்தும் சுகாதார ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எனவே தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பொதுமக்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி ஆகியோரை மட்டுமே இது தொடர்பில் அணுகுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.