Header Ads

கொவிட் கொத்தணியின் பெயர் மாற்றம்


புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ‘புத்தாண்டு கொவிட் கொத்து’ எனப் பெயரிட அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 அதன்படி அரசாங்க தகவல் திணைக்களத்தினால், நேற்று மாலை வெளியிடப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களில், இந்த பெயர் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 

 இதேவேளை முன்னதாக கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான வழக்குகள் திவூலபிட்டி, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணி போன்ற பல்வேறு பெயர்களினால் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 




No comments

Powered by Blogger.