Header Ads

30 கி.மீ வேகத்தில் ஜொந்தாமினரிடம் இருந்து தப்பிக்க முற்பட்டவர் கைது !!

 


உழவு இயந்திரம் மூலம் ஒருவர் ஜொந்தாமினரிடம் இருந்து தப்பிக்க முற்பட்ட ருசிகர சம்பவம் ஒன்று Nièvre நகரில் இடம்பெற்றுள்ளது. 

 
கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள A77 நெடுஞ்சாலையில், சாரதி ஒருவர் உழவு இயந்திரத்தில் வந்துள்ளார். வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஜொந்தாமினர் அவரை சோதனையிட வாகனத்தை நிறுத்தும் படி பணித்துள்ளார். 
 
ஆனால் நிறைந்த மதுபோதையில் இருந்த அவர் தனது உழவு இயந்திரம் மூலமாக அங்கிருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளார். 
 
அதிகபட்சமாக மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பயணிக்கும் உழவு இயந்திரம் மூலம் அவர் தப்பிக்க முயன்றது பெரும் நகைச்சுவையான சம்பவமாக மாறியது. 
 
அவரை ஜொந்தாமினர் ஆறு கிலோ மீற்றர் தூரம் துரத்திச் சென்று கைது செய்தனர். அவருக்கு €75.000 வரை தண்டப்பணம் அறவிடப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.