Header Ads

அம்பாறையில் மழையுடன் கூடிய காலநிலை!


அம்பாறையில் திடீரென மழையுடன் கூடிய காற்று வீசுகின்றமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 
அம்பாறையிலுள்ள சில இடங்களில், மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றமையினால் மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, காரைதீவு,  நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று  ஆகிய பகுதிகளில் கடும் மழையுடன் காற்று வீசுவதனால், வீதியால் பயணம் செய்த பொதுமக்கள், வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதேவேளை சில இடங்களில் புழுதியுடன் கூடிய காற்று வீசியதுடன் விளம்பர பலகைகளும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.