Header Ads

கடந்த 24 மணி நேரத்திற்குள் 417 பேர் சாடைந்துள்ளனர்


 எமானுவல் மக்ரோன் சுகாதாரப் பாதுகாப்புச் சபையைக் கூட்ட  இருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 417   பேர் சாடைந்துள்ளனர்.   இதனால் மொத்தச் சாவுகள் 87.220  இனைத் தாண்டியுள்ளது.


 இன்று  22.857 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தைத் தொட்டுள்ளது.   இதனால் பிரான்சில்  மொதத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3.783.528 ஆக உயர்ந்துள்ளது.

வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 62.247 (+300) பேர் சாவடைந்துள்ளனர்.  மற்றவர் உதவியுடன் வாழும் முதியோர் இல்லங்களில் (EHPAD) 24.973(+117) பேர் சாவடைந்துள்ளனர்

25 263  கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.

3586   பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.

பிரான்சின் வைத்தியசாலைகளில் 71 % கொரேனா நோயளிகளால் நிரம்பி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது


No comments

Powered by Blogger.