இல்து-பிரான்சின் மாவட்டங்களில் கொரோனாச் சாவுகள் 14.994 ஆக உயர்ந்துள்ளது.
இல்-து-பிரான்சில் கொரோனத் தொற்றின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்துள்ளது. கொரோனப் பரிசோதனையில் 22 சதவீதமானவர்களிற்கு இல்-து-பிரான்சில் தொற்று உறுதி செய்யப்படுகின்றது.
நிலைமை கடுமையாக மோசமடைந்து, 100.000 பேரிற்கு 323 பேர் எனும் அளவிற்கு நிலைமை ஆபத்தாக உள்ளது. செய்-சன்-துனியில் (93) மட்டும் இந்த விகிதமானது 385 ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் வைத்தியசாலையில் 300 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (02.03.2021) சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 55 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 14.994 ஆக உயர்ந்துள்ளது.
இங்கு 5.208 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரசிகிச்சைப் பிரிவில் 858 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 72% ஆகும்
இல்து-பிரான்சின் மாவட்டங்களில்
Paris - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 981 பேர் - 3.245 பேர் சாவு (+12)
La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 760 பேர் - 1.807பேர் சாவு (+3)
Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 614 பேர் - 2.250 பேர் சாவு (+10)
Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 844 பேர் - 2019 பேர் சாவு (+7)
Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 561 பேர் - 1.396 பேர் சாவு (+10)
Le Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 437 பேர் - 1.436 பேர் சாவு (+2)
L'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 550 பேர் - 1.372 பேர் சாவு (+5)
La Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 461 பேர் - 1.469 பேர் சாவு (+6)
No comments