லண்டன் லொக்டவுனில் காரில் உலாத்திய தமிழ் குடும்பம்! காவல்துறை கிடுக்குபிடி!
லண்டன் நெடுஞ்சாலையான ஏ- 3ல் , கிங்ஸ்டன் நோக்கிச் செல்லும் சாலையில் 4 பேராக காரில் சென்ற தமிழ் குடும்பம் ஒன்றை மறித்த லண்டன் மெற்ரோ பொலிடன் பொலிசார் அவர்களுக்கு 200 பவுண்ஸ் அபராதம் விதித்ததாக கூறப்படுகின்றது
அவர்கள் தமது உறவினர்களை பார்க்க சென்றவேளையே இவ்வாறு பொலிஸாரால் வழி மறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது பொலிசார் வினவியபோது அவர்களால் சரியான காரணத்தை கூற முடியவில்லை என்பதுடன் குடும்பத்தில் உள்ள 4 பேரும் காரில் இருந்துள்ளார்கள்.
இதனை அடுத்து லாக் டவுனை மீறியமைக்காகவும், அனாவசியமாக வெளியே சென்ற குற்றத்திற்காகவும், அவர்களுக்கு 200 பவுண்டுகள் தண்டப் பணத்தை பொலிசார் அறவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments