Header Ads

கொரோனா தடுப்பூசியால் இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள அபாயம்!



இலங்கையில் கொரோனா தொற்றினை எதிர்ப்பதற்கு வழங்கப்படும் எஸ்ட்ரா செனிக்கா எனப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசி இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் அச்சமடைய தேவையில்லை என சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் சுனில் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கிய பின்னர் காய்ச்சல், உடல் வலி, உடலில் விறைப்புத் தன்மை, குமட்டல், வாந்தி, மற்றும் ஊசி போட்ட இடத்தில் புண் மற்றும் சிவத்தல் போன்ற சிறிய ஒவ்வாமை ஏற்படலாம்.

எதிர்வரும் நாட்களில் 40 – 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அதனையடுத்து 20 – 30 வயதிற்குட்பட்டவர்களுக்கும், மூன்றாம் கட்டத்தில் 60 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




No comments

Powered by Blogger.