Header Ads

சிகரெட் ஒன்றுக்காக இரு சிறுவர்கள் கொலை முயற்சி - தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒருவர் !!



சிகரெட் ஒன்றுக்காக கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை Yvelines மாவட்டத்தின்  Limay நகரில் இடம்பெற்றுள்ளது.  Limay தொடருந்து நிலையத்து அருகே பகல் 1.50 மணியளவில் நபர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை மூன்று சிறுவர்கள் வழி மறித்துள்ளனர். பின்னர் அவரிடம் சிகரெட் இருக்கின்றதா என கேட்டுள்ளனர். 
 
சிகரெட் வழங்க மறுத்துள்ளதை அடுத்து, குறித்த மூவரில் ஒருவர் கூரான கத்தி ஒன்றின் மூலம் அவரை தாக்கியுள்ளார். பின்னர் குறித்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 
 
இச்சம்பவத்தில் தொடர்புடைய 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாம் நபர் தேடப்பட்டு வருகின்றார். 
 
படுகாயமடைந்த நபரை SAMU அதிகாரிகள் உலங்குவானூர்தி மூலம் Clichy (Hauts-de-Seine) நகர மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.