Header Ads

உருமாறிய கொரோனாவை தடுக்கும் தடுப்பூசி…?

 


சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது அது உருமாற்றம் அடைந்த பல்வேறு வடிங்களில், பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

பிரித்தானியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிராக தற்போதுதான் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதனால், இந்த தடுப்பூசிகள் மேற்படி உருமாற்றம் பெற்ற வைரஸ்களையும் எதிர்கொள்ளுமா எனும் அச்சம் மருத்துவ வட்டாரங்களில் எழுந்துள்ளன.

ஆனால் இந்த உருமாறிய கொரோனா தொற்றுக்களை தற்போதைய தடுப்பூசிகளே தடுக்கும் என பிரித்தானியாவின் தடுப்பூசித்துறை மந்திரி நதிம் சகாவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போதைய தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா தொற்றுக்கு எதிராக, குறிப்பாக இவை தீவிர நோயாகவோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும்போதோ வீரியமாக இருக்காது என்பது மிகவும் அரிது.

உலக அளவில் உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்றுகள் தற்போது சுமார் 4 ஆயிரம் இருப்பதாக கூறிய அவர், எனவே அவற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல் திறனை அதிகரிப்பது குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.