Header Ads

நாட்டில் மேலும் 574 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு!



நாட்டில் மேலும் 574 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78ஆயிரத்து 947 ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 82 ஆயிரத்து 890ஆகப் பதிவாகியுள்ளதுடன் அவர்களில், இன்னும் மூவாயிரத்து 479 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 464 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.