கனடவில் துப்பாக்கி சூடு தாக்குதல்! 3 பேர் படுங்காயம்
ரொறன்ரோவில் Regent Park பகுதியில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில், நேற்றிரவு 11.43 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஆண்கள் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து விரைந்து சென்ற பொலிசார், மூன்று ஆண்கள் காயமடைந்த நிலையில் இருப்பதை கண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவர்களில் 60 வயதான ஒருவரின் நிலை ஆபத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments