35 முறை மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவன்!
திருகோணமலை – கந்தளாய் பகுதியில் தனது மனைவியை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த தனது மனைவியை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த கணவன் வழி மறித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வாய்த்தர்க்கத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து தனது மனைவியை சரமாரியாக 35 தடவைகள் வெட்டியும், குத்தியும் படுகாயம் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தாக்குதலை நடத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments