Header Ads

24 மணி நேரத்திற்குள் 456 பேர் சாடைந்துள்ளனர்

 


தொடர்ச்சியான ஊரடங்குக் கட்டுப்பாடு வலுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், கொரோனாத் தொற்றும், கொரோனாச் சாவுகளும் உச்சத்தை நோக்கிச் சென்று, நாளிற்கு நாள், மிகவும் ஆபத்தாகவும் மோசமாகவும் சென்று கொண்டு இருக்கின்றது.

 
கடந்த 24 மணி நேரத்திற்குள்  456 பேர் சாடைந்துள்ளனர்.   கடந்த 24 மணித்தியாலங்களில்இதனால் மொத்தச் சாவுகள்  76.512  ஆக உயர்ந்துள்ளது.  
 
வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 53.809 பேர் சாவடைந்துள்ளனர். 
 
கடந்த 24 மணி நேரத்திற்குள் 4.347  பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனால் பிரான்சில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை   3.201.461 ஆக உயர்ந்துள்ளது.
 
27.914 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
3.228 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள்  இது அதிகரித்தே செல்கின்றது. 
 
கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும்,  வைத்தியசாலைகளில்1.748 பேர்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தீவிர சிகிச்சைப் பிரிவில் 170 பேர்அனுமதிக்கப்பட்டுள்ளனர்

No comments

Powered by Blogger.