Header Ads

மிக்க கடுமையான கட்டுப்பாடுகள் 10 நாட்களிற்குள் எடுக்க இருப்பதாக - எமானுவல் மக்ரோன்

 


பிரான்சில் கொரோனாத் தொற்றுக்கள் ஒவ்வொருநாளும் சராசரியாக 22.000 அதிகரித்து வரும் நிலையிலும், பிரான்சில் பிரித்தானிய, தென்னாபிரிக்க, பிரேசில் வைரசின் தாக்குதலும், பெருமளவாகப் பரவி வரும் நிலையிலும் அரசாங்கம் தொடர்ந்தும், 18h00 மணி ஊரடங்கை மட்டுமே கடைப்பிடித்து வருகின்றது.


மேலதிகக் கட்டுப்பாடுகள் விதிப்பதா, அல்லது, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா என்பது பற்றிய முடிவுகளை அடுத்து 8 இலிருந்து 10 நாட்களிற்குள் எடுக்க இருப்பதாக, பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பிராந்தியங்களிற்குமான பாடசாலை விடுமுறைகள் முடிந்து, விடுமுறைக்குச் சென்றவர்கள் வரும்வரை அரசாங்கம் காத்திருப்பதாகவே ஜனாதிபதியின் அறிக்கை எண்ணத் தோன்றுகின்றது.

ஆனால் விஞ்ஞானக்குழு மிக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும்படியே அறிவுறுத்துவது குறிப்பிடத்தோன்றுகின்றது.

No comments

Powered by Blogger.