என்ன விலை கொடுத்தும் அடுத்த உள்ளிருப்பைத் தவிர்க்கவே விரும்புகின்றது -அரசாங்கம்
தற்போது உள்ள காலநிலை மாற்றம், மற்றும் வர இருக்கும் வசந்தகாலம், கொரோனாப் பரவலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என, அரசாங்கம் ஒரு ஆய்வை மேற்கொண்டு வருகின்றது.
பிரான்சில் பாடசாலை விடுமுறைகளிற்கு, வெளியே சென்றிருக்கும் மக்கள் என்றும் இல்லாதவாறு மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்ற அறிவுரை அரசாங்கத்தின் பல மட்டங்களில் இருந்தும் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது.
அரசாங்கம் என்ன விலை கொடுத்தும் அடுத்த உள்ளிருப்பைத் தவிர்க்கவே விரும்புகின்றது. பொருளாதார, சமூகப் பாதிப்புகளைத் தவிர்ப்பதை விரும்பும் எமானுவல் மக்ரோன் அரசு, காலநிலை மாற்றத்தினையும், அதனால் ஏற்படும் கொரோனத் தொற்றுக்களின் மாற்றங்களையும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றது.
No comments