Header Ads

(Seine-et-Marne) நகரில் கண்களை தோண்டி எடுத்து கொடூர கொலை! - அதிர்ச்சி..!!அதிர்ச்சி..!!

 


கண்களை தோண்டு எடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. 

 
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இச்சம்பவம்   Pontault-Combault (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. பிராந்திய காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மகிழுந்து ஒன்றின் பின் இருக்கையில் நபர் ஒருவரின் சடலம் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 
 
கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சடலம் மிக கோரமாக காட்சியத்துள்ளது. முதலில் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், பின்னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர். “மிக அதிர்ச்சியான காட்சியாக அது இருந்தது!’ என காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். 
 
கொல்லப்பட்ட நபர் 52 வயதுடையவர் எனவும், அவர் வசித்த வீட்டின் தரை தளத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்தே அவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரது உடலில் வேறு எங்கும் தடயங்க்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.