Header Ads

பிரித்தானியாவில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா உயிரிழப்புக்கள்

 


உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக பிரித்தானியா விளங்குகின்றது.

பிரித்தானியாவில் கொரோனா பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயிரத்து 308பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆயிரத்து 725பேர் உயிரிழந்துள்ளனர்.

37இலட்சத்து 15ஆயிரத்து 054பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து ஆயிரத்து 997பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 19இலட்சத்து 39ஆயிரத்து 231பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மூவாயிரத்து 961பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 16இலட்சத்து 73ஆயிரத்து 936பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

No comments

Powered by Blogger.