Header Ads

🔴 விசேட செய்தி : மதுச்சாலை, உணவகம், அருந்தகம்... திறக்கப்படும் திகதி மீண்டும் பிற்போடப்பட்டது!!

 


மதுச்சாலைகள், உணவகங்கள் மற்றும் அருந்தகம் போன்றவை திறக்கப்படும் திகதி மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. 

 
ஜனவரி 20 ஆம் திகதி இவை திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குறித்த திகதியில் அவை திறக்கப்படமாட்டாது எனவும், உணவக உரிமையாளர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் காத்திருக்கவேண்டும் எனவும் பிரதமர் Jean Castex சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
 
திறக்கப்படும் திகதி உறுதியாக பிரதமரால் அறிவிக்கப்படவில்லை.  என்றபோதும், இம்மாதம் நிச்சயமாக திறக்கப்படமாட்டாது எனவும், பெப்ரவரியின் நடுப்பகுதியில் இவை திறக்கப்பட அனுமதியளிக்கப்படலாம் எனவும் அறியமுடிகிறது. 

No comments

Powered by Blogger.