கொரோனா தடுப்பூசி! - ஐந்து நாட்களில் 45.000 பேருக்கு போடப்பட்டது..!!
கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் கடந்த 5 நாட்களில் 45.000 பேருக்கு போடப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவது வேகமெடுத்துள்ள நிலையில், இதற்கான வயது வரம்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த ஜனவரி 2 ஆம் திகதியில் இருந்து இன்று வரை மொத்தமாக 45.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனவரி மாத இறுதிக்குள் பிரான்சில் குறைந்தது ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும் என பிரதமர் Jean Castex சற்று முன்னர் அறிவித்தார்.
No comments