பதுளை, வலப்பனை பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம்
இலங்கையில் பதுளை, வலப்பனை பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
புவிச்சரிதவியல் மற்றம் சுங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலஅதிர்வு மஹகனதராவ, பல்லேகெலே மற்றும் ஹக்மன நில அதிர்வு அளவீடுகளில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை, வியலுவ எகிரிய கிராமத்திற்கும் குறித்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்
No comments