Header Ads

வெள்ளவத்தையில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று! முடக்கப்பட்ட சந்தை

 


வெள்ளவத்தை சந்தையில் பணியாற்றிய 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை சுகாதார மருந்துவ அதிகாரி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சில தினங்களாக வெள்ளவத்தைப் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் வெள்ளவத்தை பகுதியில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.