Header Ads

சீனா செல்லும் தயாராகும் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு



உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றுநோய் முதன்முதலில் மத்திய சீன நகரமான வுஹானில் 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தோன்றியது.

ஒரு வருடத்திற்கு முன்னர் 61 வயதான ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த அதிகாரப்பூர்வமான முதல் நபராக அறிவிக்கப்பட்டது.

அவர் மற்றும் அவரை தொடர்ந்து பதிவான சில கொரோனா பாதிப்புகள், சீனாவின் வுஹான் நகத்தில் உள்ள Huanan கடல் உணவு சந்தையுடன் தொடர்புகொண்டாக அறியப்பட்டது.

இந்த பெருந்தொற்று தோன்றிய இடம் சீனா தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு எந்தவித நம்பத்தகுந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, கொரோனா வைரஸின் உண்மையான பிறப்பிடம் மற்றும் அதன் தோற்றத்தை கண்டுபிடிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், COVID-19 தொற்றுநோயின் தோற்றம் குறித்து ஆராயும் உலக சுகாதார அமைப்பின் (WHO) சர்வதேச நிபுணர்களின் குழு, வரும் ஜனவரி 14-ஆம் திகதி சீனாவுக்கு வரவுள்ளதாக, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் SARS-CoV-2 வைரஸ் தோற்றத்தை அறியவும், அதன்முலம் எதிர்காலத்தில் இதுபோன்ற புதிய வைரஸ்கள் தோன்றாமல் தடுக்கவும், இந்த தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என WHO தலைவர் Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளார்.

WHO மற்றும் சீன அரசாங்கத்தின் கூட்டு அதிகார வரம்பிற்கு உட்பட்ட 10 சர்வதேச வல்லுநர்கள் இந்த ஒரு பயணத்தில், மார்க்கெட் கட்டிடத்தில் கடந்த ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், மக்கள் மற்றும் விலங்குகளின் ஆழமான ‘தொற்றுநோயியல், வைராலஜிக், செரோலாஜிக் மதிப்பீடுகளை’ ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.