பிரித்தானியர்களுக்கு போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியிலுள்ள சுமார் 2,000 வீடுகளில் வசிக்கும் பிரித்தானியர்கள் நேற்றிரவு வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
Christoph என்று பெயரிடப்பட்ட புயல் ஒன்று பிரித்தானியாவை தாக்கிய பின் பனியும் மழையும் கொட்டித்தீர்த்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கொட்டித்தீர்த்த மழையால் கிரேட்டர் மான்செஸ்டர், நார்த்தம்பர்லாண்ட் மற்றும் யார்க்ஷையர் ஆகிய பகுதிகளிலுள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்த.
சுற்றுச்சூழல் ஏஜன்சி இங்கிலாந்திலுள்ள 130 இடங்களுக்கு பெருவெள்ள எச்சரிக்கையும், 225 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது
இரண்டு மாதங்களுக்கு பெய்யவேண்டிய மழை, 36 மணி நேரத்தில் பெய்தமையே இதற்கான காரணமாகும்.
மீட்புப் பணிக்காக இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் மேலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானியா முழுவதும் உள்ள மக்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்களுக்கு உதவ தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments