Header Ads

அமெரிக்காவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா…



 உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

அமெரிக்காவில் ஒரேநாளில் கொரோனா பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூன்று இலட்சத்து ஆயிரத்து 655பேர் பாதிக்கப்பட்டதோடு மூவாயிரத்து 914பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை இரண்டு கோடியே 24இலட்சத்து 56ஆயிரத்து 902பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 78ஆயிரத்து 149பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 88இலட்சத்து 18ஆயிரத்து 804பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 29ஆயிரத்து 140பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுதவிர ஒரு கோடியே 32இலட்சத்து 59ஆயிரத்து 949பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

No comments

Powered by Blogger.