Header Ads

பரிசில் கதவை உடைத்த காவற்துறையினர்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!!



 பரிசில் ஒருவரை அடைத்து வைத்திருந்தவரிற்கும் அயலவரிற்கும் நடந்த தகராற்றில் காவற்துறையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

 
பிரச்சினை நடந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் நேற்று பலத்த சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்த நிலையில், கதவைத் தட்டி எந்தப் பதிலும் இல்லாத நிலையில், வீட்டின் கதவை உடைத்து, காவற்துறையினர் நுழைந்தபோது, அங்கு 80 வயதுடைய முதியவர் சாவடைந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இவரது மரணம் தற்போது இயற்கையான மரணம் எனத் தெரிவிக்கப்ட்டிருந்தாலும் சட்டவியல் மருத்தவக் கல்லூரியில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக இவரது உடலம் வைக்கப்பட்டுள்ளது.
 
பரிஸ் 13 இலுள்ள Porte d'Ivry யிலுள்ள square du limousin இலிருக்கும் HLM கட்டடத் தொகுதியில் உள்ள, சாவடைந்தவரி;ன் வீட்டிற்கு அருகிலுள்ள அயலவர் வீட்டிற்குள் புகுந்து அவரை அடைத்து வைக்க முயன்ற 53 வயதுடைய நபர் காவற்துறையினரால் வைது செய்யப்பட்டுள்ளார். இவர் சாவடைந்த இந்த முதியவரையும் வெளியே வர விடாமலே தடுத்து வைத்திருந்தும் உள்ளார்.
 
பக்கத்து வீட்டிற்குள் சோதனை செய்தபோது, அங்கும் ஒரு நபர் கட்டிவைக்கப்பட்டு இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரின் முகத்தில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.
 
கைது செய்யப்பட்டவரிற்கு அடிக்கடி உளநிலைப் பாதிப்பும் ஏற்படுவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.